சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
மிக குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் லேட்டஸ்ட் வரவு ராஷ்மிகா மந்தனா தான். இதில் கிடைத்த அங்கீகாரத்தை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். இந்தநிலையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்கிற கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் ரஷ்மிகா, இந்தப்படம் வரும் டிச-17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அல்லு அர்ஜுன் ராஷ்மிகா பற்றி குறிப்பிடும்போது, “ரசிகர்கள் மத்தியில் தேசிய அளவிலான 'க்ரஷ்' ஆக மாறிவிட்டார் ராஷ்மிகா. அதனால் நான் கூட ராஷ்மிகாவை க்ரஷ்மிகா என்றுதான் செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவேன்... நாம் பணியாற்றும்போது ஒருசிலரிடம் மட்டும் நமக்கு இனம் புரியாத அன்பு ஏற்படும்.. அப்படி ஒருவர் தான் ராஷ்மிகா. சரியான, இயக்குனர்கள், சரியான கதையை தேர்வு செய்தால் அவரது திறமைக்கு வரும் காலங்களில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்” என பாராட்டு பத்திரமும் வாசித்தார் அல்லு அர்ஜுன்.