ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மிக குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் லேட்டஸ்ட் வரவு ராஷ்மிகா மந்தனா தான். இதில் கிடைத்த அங்கீகாரத்தை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். இந்தநிலையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்கிற கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் ரஷ்மிகா, இந்தப்படம் வரும் டிச-17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அல்லு அர்ஜுன் ராஷ்மிகா பற்றி குறிப்பிடும்போது, “ரசிகர்கள் மத்தியில் தேசிய அளவிலான 'க்ரஷ்' ஆக மாறிவிட்டார் ராஷ்மிகா. அதனால் நான் கூட ராஷ்மிகாவை க்ரஷ்மிகா என்றுதான் செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவேன்... நாம் பணியாற்றும்போது ஒருசிலரிடம் மட்டும் நமக்கு இனம் புரியாத அன்பு ஏற்படும்.. அப்படி ஒருவர் தான் ராஷ்மிகா. சரியான, இயக்குனர்கள், சரியான கதையை தேர்வு செய்தால் அவரது திறமைக்கு வரும் காலங்களில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்” என பாராட்டு பத்திரமும் வாசித்தார் அல்லு அர்ஜுன்.