அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? |
கடந்த நவம்பர் 2-ந்தேதி பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தபோது, அவரது சினிமா சாதனைகளை தான் பாராட்டியதாகவும், ஆனால் தனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அவர் தன்னை இழிவுபடுத்தியதோடு, தனது சாதியை தவறாக குறிப்பிட்டதாகவும் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகாகாந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலானர் ஜான்சன் மீது ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தன்னை தாக்கியதாகவும் அதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ள மகாகாந்தி, தான் அவர்களை தாக்கியது போன்று அவதூறு செய்தி பரப்பி விட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற ஜனவரி 4-ந்தேதி விஜய் சேதுபதி, ஜான்சன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.