ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அசோக் செல்வன், மணிகண்டன், அபி, நாசர், கேஎஸ்.ரவிக்குமார், பானுப்பிரியா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛‛சில நேரங்களில் சில மனிதர்கள்''. விஷால் வெங்கட் இயக்கி உள்ளார். உணர்வுப்பூர்வமாக உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் பங்கேற்று நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: சினிமாவுக்கு சாதி, மதம் கிடையாது. தியேட்டரில் விளக்கை அணைத்து விட்டால் அங்கு சாதி, மதம் காணாமல் போய்விடும். இங்கு ஆர்வம், திறமை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. எங்களை பார்த்து புதியவர்கள் வியக்க வேண்டாம். நாங்கள் செய்த தவறை நீங்கள் செய்யாமல் இருந்தால் போதும். குப்பத்திலும், மழைநீரிலும் நடந்து சென்ற போது வராத கொரோனா நான் அமெரிக்கா துபாய் போய்விட்டு வந்த பின் வந்து விட்டது. யாரும் அஜாக்கிரதையாக இருக்காதீர்.
இவ்வாறு அவர் பேசினார்.