மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. கயடு லோஹர் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப் பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது சிம்பு ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக தெரிவித்துள்ளார். அதோடு தனது கையில் துப்பாக்கியுடன் நிற்கும் ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இன்னும் சில தினங்களோடு இந்த படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி விடும் என்றும் அப்படக்குழு வட்டாரங்களில் ஒரு தகவல் செவளியாகியுள்ளது.