ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். இரண்டு வார சிகிச்சைக்குப் பிறகு கடந்த 4ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
அங்கிருந்து நேராக பூந்தமல்லியில் உள்ள பிக் பாஸ் அரங்கிற்குச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். முன்பைப் போல அன்றைய தினம் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர் கொண்டதாக தகவல் வெளியானது. மேலும், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் ஒருவர் ஏழு நாட்களுக்கு அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கமல்ஹாசன் அப்படி எதுவும் செய்யாமல் நேராக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.