ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் 'டம்மி டப்பாசு' படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் வெளிவந்த 'ஜோக்கர்' படம் அவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்தது. அதற்கு பின் அவருடைய புடவை அணிந்த கவர்ச்சியான போட்டோ ஷுட் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அடுத்து டிவியில் அவர் கலந்து கொண்ட 'குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 2' ஆகியவை அவருக்கு மக்களிடம் நல்ல பிரபலத்தைத் தந்தது.
அவர் கடைசியாக தமிழில் நடித்த 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து மலையாளப் படத்தில் முதல் முறையாக நடிக்க உள்ளார் ரம்யா. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற படத்தில் ரம்யா நடிக்கிறார்.
இப்படம் குறித்து, “எனது அடுத்த புரொஜக்ட் மலையாளத்தில் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. விமர்சன ரீதியாக பெயர் பெற்ற, அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி சாருடன் நடிப்பதன் மூலம் கனவு நனவாகிறது. தேனி ஈஸ்வர் சாருக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி,” என மலையாளப் படத்தில் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ரம்யா.