வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் | துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் |
தமிழில் 'டம்மி டப்பாசு' படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் வெளிவந்த 'ஜோக்கர்' படம் அவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்தது. அதற்கு பின் அவருடைய புடவை அணிந்த கவர்ச்சியான போட்டோ ஷுட் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அடுத்து டிவியில் அவர் கலந்து கொண்ட 'குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 2' ஆகியவை அவருக்கு மக்களிடம் நல்ல பிரபலத்தைத் தந்தது.
அவர் கடைசியாக தமிழில் நடித்த 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து மலையாளப் படத்தில் முதல் முறையாக நடிக்க உள்ளார் ரம்யா. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற படத்தில் ரம்யா நடிக்கிறார்.
இப்படம் குறித்து, “எனது அடுத்த புரொஜக்ட் மலையாளத்தில் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. விமர்சன ரீதியாக பெயர் பெற்ற, அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி சாருடன் நடிப்பதன் மூலம் கனவு நனவாகிறது. தேனி ஈஸ்வர் சாருக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி,” என மலையாளப் படத்தில் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ரம்யா.