Advertisement

சிறப்புச்செய்திகள்

ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மரைக்கார் ரிலீஸ் : சென்னையில் மனம் மாறிய மோகன்லால்

16 நவ, 2021 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Marakkar-movie---Mohanlal-decision-made-at-chennai

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான வரலாற்று படமாக உருவாகி உள்ளது மரைக்கார் - அரபிக்கடலிண்டே சிம்ஹம். இந்த படத்தை மோகன்லாலின் நெருங்கிய நண்பரான ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். கடந்த வருடம் இந்த படத்தை ஒடிடி தளங்கள் போட்டி போட்டு கேட்டபோதும் கூட தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வேன் என உறுதியாக நின்றார் ஆண்டனி பெரும்பாவூர்.

ஆனால் இப்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கூட அதில் மரைக்கார் படத்தை வெளியிடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காது என்பதால் தனது முடிவை மாற்றிக் கொண்டு ஒடிடியில் படத்தை ரிலீஸ் செய்யத் தயாரானார்.

இவ்வளவு பெரிய படம் வெளியாகும்போது தியேட்டருக்கு பொதுமக்கள் திரண்டு வருவார்கள், ஓரளவு லாபமும் பார்க்கலாம் என்று எண்ணியிருந்த திரையரங்கு உரிமையாளர்கள் அவரது இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதன்பிறகு கேரள மாநில அமைச்சர் ஷாஜி செரியன் இந்த விவகாரத்தில் தலையிட்டு சில உறுதிமொழிகளை கொடுத்தபிறகு இந்த படம் முதலில் தியேட்டரில் வெளியாகும் என்றும் அதன் பிறகு ஒடிடியில் வெளியாகும் என்றும் முடிவானது. ஆனால் மோகன்லாலும் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரும் மீண்டும் இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முடிவெடுப்பதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த படத்தை ஒடிடியில்தான் வெளியிடுவது என தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உறுதியாக முடிவு எடுத்த நிலையில் படத்தின் இயக்குனரான பிரியதர்ஷன், மோகன்லால், ஆண்டனி பெரும்பாவூர் இருவரையும் சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டருக்கு வரவழைத்து தான் வேறு ஒரு படத்திற்காக கோல்கட்டா செல்ல இருப்பதாகவும், அதற்கு முன்னதாக கடைசியாக ஒருமுறை மரைக்கார் படத்தை பாருங்கள் என்றும் கூறியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று தயாரிப்பாளர், மோகன்லால் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மூன்று பேரும் இந்த படத்தை பார்த்துள்ளனர்.

ஏற்கனவே இவர்கள் இந்த படத்தை பார்த்து இருந்தாலும் தற்போது விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட சில சிறப்பு அம்சங்கள் சேர்த்து மெருகூட்டப்பட்டு இந்த படத்தை பார்த்தபோது மூவருமே தங்களை மறந்தபடி படம் பார்க்க ஆரம்பித்தனராம். குறிப்பாக கிளைமாக்ஸ் சமயத்தில் மோகன்லாலின் மனைவி சுசித்ராவின் கண்களில் கண்ணீரே வந்து விட்டதாம். படம் முடிந்து விளக்குகள் எரிந்த பின்னரும்கூட மூவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனராம். அதன்பின் வெளியே வந்ததும் தயாரிப்பாளரிடம் மோகன்லால் கேட்ட கேள்வி இப்போது என்ன பண்ணலாம் என்பதுதான்.

காரணம் இப்படி ஒரு அருமையான படத்தை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்தால்தான் நம் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைத்ததாக அர்த்தம் என அவர் நினைத்துள்ளார். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளரிடம் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட்டால் எவ்வளவு நஷ்டம் வரும் என்று கேட்டுள்ளார். மோகன்லாலே இப்படி கேட்டதும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை நாம் தியேட்டரில் இந்த படத்தை வெளியிடுவோம் என கூறியுள்ளார். மோகன்லாலும், சரிதான் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் அடுத்த படங்களில் அதை நாம் சரி செய்து கொள்வோம். அதனால் மரைக்கார் படத்தை தியேட்டரிலேயே வெளியிடலாம் என உறுதியான முடிவை எடுத்தாராம்..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயிலுக்கு யுஏ சான்றிதழ்ஜெயிலுக்கு யுஏ சான்றிதழ் மஹத் நடிப்பில் உருவாகும் 2030 மஹத் நடிப்பில் உருவாகும் 2030

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in