ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 1970ம் ஆண்டு வாழ்ந்த பிரபல கொள்ளையன் டைகர் நாகேஸ்வரராவின் வாழ்க்கை அதே பெயரில் சினிமாவாகிறது. சென்னை புழல் சிறை உள்பட அவர் அடைத்து வைக்கப்பட்ட அத்தனை சிறைகளில் இருந்தும் அவர் தப்பித்திருக்கிறார். ஒவ்வொரு சிறையில் இருந்தும் அவர் எப்படி தப்பித்தார் என்பதை ஆந்திர போலீஸ் பயிற்சி மையத்தில் பாடமாக வைத்துள்ளனர். இறுதியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கதைதான் இப்போது படமாகிறது. டைகர் நாகேஸ்வரராவாக ரவி தேஜா நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரவி தேஜா தன்னை முழுவதுமாக தயார்படுத்தி வருகிறார். இப்படத்தில் அவரது உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றம் முன்னெப்போதிலும் இல்லாத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
படத்தை இயக்கவிருக்கும் வம்சி கடந்த 3 ஆண்டுகளாக தனது குழுவினருடன் இணைந்து திரைக்கதை மற்றும் இதர முன்-தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார், தேஜ் நாராயண் அகர்வால் வழங்குகிறார்.
இது ரவி தேஜாவின் முதல் அகில இந்திய படமாகும். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இது உருவாகிறது. ஆர் மதி ஒளிப்பதிவை கையாள, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.