ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ராம்சரணை வைத்து தமிழ், தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ராம்சரண் - கியாரா அத்வானி நடிக்கும் பாடல் காட்சி படமாகி வருகிறது. இப்படத்தில் அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் ஷங்கரின் இந்த தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது மலையாள நடிகர் சுரேஷ் கோபி வில்லனாக நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2015ல் விக்ரம், எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் சுரேஷ்கோபி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




