மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ஆச்சார்யா படத்தை முடித்து விட்டு தற்போது மலையாள லூசிபர் ரீமேக்கான காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குனர் மோகன்ராஜா இயக்கி வருகிறார். படப்பிடிப்பின்போது சிரஞ்சீவிக்கு அடிக்கடி வலது கை உணர்விழந்தது. இதனால் அவர் சண்டை காட்சிகளில் நடிக்க சிரமப்பட்டார்.
இதை தொடர்ந்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கார்பண்டல்ஸ் சிண்ட்ரம் எனப்படும் அடிக்கடி கைகள் மரத்துப்போகும் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு அங்கு ஆபரேஷன் நடந்தது.
தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் சிரஞ்சீவி இதுகுறித்து கூறியிருப்பதாவது: எனது வலது கை அடிக்கடி உணர்வற்ற போவதால் சரியாக பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதற்காக கையின் நடு நரம்பில் ஆபரேஷன் செய்து கொண்டேன். இந்த ஆபரேஷன் 45 நிமிடங்கள் நடந்தது. இது பூரண குணமாக 15 நாட்கள் ஆகும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். என்று தெரிவித்திருக்கிறார். இதை தொடர்ந்து காட்பாதர் படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.