காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தஞ்சை மாவட்டத்திலுள்ள ரெட்டிப்பாளையம் எனும் சிறிய கிராமத்தில் பிறந்த நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆண்டனி தாசன். குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் பாடல்கள் இயற்றிப் பாடும் கலைஞராக உருவெடுத்துள்ளார். சமீபகாலமாக நடிக்கவும் தொடங்கி இருக்கிறார். அவியல், எம்.ஜி.ஆர் மகன் படங்களுக்கு இசை அமைத்தும் வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு பின்னணி பாடல் பாடி அடுத்த கட்டத்தை அடைந்துள்ளார். அண்ணாத்த படத்தின் 3வது பாடல் நேற்று வெளியானது. மருதாணி செவப்பு செவப்பு மகராணி சிரிப்பு சிரிப்பு... என்ற பாடலை நாட்டுப்புற மெட்டில் பாடி உள்ளார். அவருடன் வந்தனா சீனிவாசன் இணைந்து பாடி உள்ளார். அமுதவன் எழுதிய பாடலுக்கு இமான் இசை அமைத்துள்ளார்.
இந்த பாடலுக்கு ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு ஆடியுள்ளனர். இது ஒரு கொண்டாட்ட பாடலாக படமாக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷின் பூப்புனித நன்னீராட்டு விழா, பாடலுக்கான சூழலாக அமைந்துள்ளது. நூற்றுக்கணகான துணை நடிகர்கள், நடன கலைஞர்களை கொண்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.