டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ், லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக ஆனார். தற்போது மோகன்லால் நடிக்கும் புரோ டாடி படத்தை இயக்கி வருகிறார். பிருத்விராஜின் இன்னொரு முகம் தயாரிப்பாளர்.
பிருத்விராஜ் புரொடக்ஷன் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி மலையாளத்தில் படங்களை தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் 2019ம் ஆண்டு வெளியான மலையாள படம் டிரைவிங் லைசென்ஸ். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. லால் ஜூனியர் இயக்கிய இந்த படத்தில் பிருத்விராஜ், சுரஜ் வெஞ்சரமுடு, மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
ஒரு முன்னணி நடிகருக்கும், வட்டார போக்குவரத்து அலுவலக பிரேக் இன்ஸ்பெக்டருக்கும் நடக்கும் ஈகோ மோதல் தான் கதை. நடிகர் விதவிதமான கார் வாங்குகிறவர். ஆனால் அவரிடம் டிரைவிங் லைசன்ஸ் இருக்காது. ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக டிரைவிங் லைசென்சுக்கு விண்ணப்பம் செய்வார். அப்போது ஆரம்பிக்கும் மோதல். இத்தனைக்கும் அந்த இன்ஸ்பெக்டர் நடிகரின் தீவிர ரசிகர். நடிகராக பிருத்விராஜும், இன்ஸ்பெக்டராக சுரஜ் வெஞ்சரமுடுவும் நடித்திருந்தார்கள்.
இதன் இந்தி ரீமேக்கில் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார். சுரஞ் வெஞ்சரமுடு கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தை பிருதிவிராஜ் தயாரிக்க உள்ளார். இதன் மூலம் இந்தி பட உலகிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.