‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
மலையாள சினிமாவின் ஆக்சன் கிங் நடிகராக வலம் வந்த நடிகர் சுரேஷ்கோபி, கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலில் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்த அவர் ராஜ்யசபா எம்பி.ஆகவும் மாறினார். அதேசமயம் தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமாவை மறக்க முடியாமல் மீண்டும் மலையாள திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். தற்போது பாப்பன், காவல், மற்றும் தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
பல வருடங்களாக முகநூல் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சுரேஷ்கோபி, தற்போது டுவிட்டரிலும் அடியெடுத்து வைத்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் இதுதான் என அறிவித்துள்ள சுரேஷ்கோபி, “என்னுடைய பெயரில் போலியாக இயங்கும் கணக்குகளை பின்தொடரவோ அல்லது அதில் உள்ள செய்திகளை பகிரவோ வேண்டாம் என்றும் ரசிகர்களை எச்சரித்துள்ளார்.