வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாள சினிமாவின் ஆக்சன் கிங் நடிகராக வலம் வந்த நடிகர் சுரேஷ்கோபி, கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலில் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்த அவர் ராஜ்யசபா எம்பி.ஆகவும் மாறினார். அதேசமயம் தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமாவை மறக்க முடியாமல் மீண்டும் மலையாள திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். தற்போது பாப்பன், காவல், மற்றும் தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
பல வருடங்களாக முகநூல் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சுரேஷ்கோபி, தற்போது டுவிட்டரிலும் அடியெடுத்து வைத்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் இதுதான் என அறிவித்துள்ள சுரேஷ்கோபி, “என்னுடைய பெயரில் போலியாக இயங்கும் கணக்குகளை பின்தொடரவோ அல்லது அதில் உள்ள செய்திகளை பகிரவோ வேண்டாம் என்றும் ரசிகர்களை எச்சரித்துள்ளார்.