கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யாவுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. தற்போது தெலங்கானா மாநிலத்தில் கிழக்கு கோதாவரி ஆற்றில் நாகசைதன்யா நடிக்கும் 'லவ் ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நாகசைதன்யா படகு சவாரி செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. .
அப்போது ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் இருந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த ரசிகர்கள் கோஷமிட்டு நாகசைதன்யாவின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தனர். அதில் தீவிர ரசிகர் ஒருவர், வெகு அருகில் சென்று நாகசைதன்யாவை பார்க்க வேண்டும் என்பதற்காக பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து நாகசைதன்யாவின் படகை நோக்கி நீந்தி செல்லும் வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதன்பின் அந்த ரசிகரை தனது படகில் ஏற்றிய நாகசைதன்யா, அவரை தனது கேரவனுக்கு அழைத்து சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவருக்கு அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தார் நாகசைதன்யா.