பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
சமீபத்தில் சோஷியல் மீடியாவில் துல்கர் சல்மான் குறித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருவதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஆழப்புழா பகுதியில் படப்பிடிப்புக்காக சென்ற துல்கர் சல்மான், பைபாஸ் ரோட்டில், சாலை விதிகளை மீறி, வாகனங்கள் வரும் எதிர் திசையில் தனது காரை ஓட்டிச்சென்று சிக்னலில் நிறுத்தியுள்ளார். அங்கிருந்த போக்குவரத்து காவலர், காரை பின்னால் எடுத்துச்சென்று, வரிசையில் வருமாறு துல்கரிடம் கூறியுள்ளார்,
உடனே சினிமாவில் வருவது போல, படு ஸ்பீடாக காரை ரிவர்ஸ் எடுத்து, கிட்டத்தட்ட 50 மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று, மீண்டும் சரியான திசையில் பறந்துள்ளார் துல்கர் சல்மான். அந்த பகுதியில் டூவீலரில் பயணித்த நபர் ஒருவர் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். போக்குவரத்து காவலர் சொன்னதை துல்கர் சல்மான் ஏற்றுக்கொண்டாலும், அவர் தெரிந்தே சாலை விதிகளை மீறியது தவறு என்று சிலர் துல்கரின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.
அதேசமயம் ரசிகர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, “ஆழப்புழா பைபாஸ் சாலையில், குறிப்பாக இந்த சிக்னலில், முறையான கைகாட்டி பலகைகள் வைக்கப்படாததால், உள்ளூர்வாசிகளே தங்களை அறியாமல் அடிக்கடி இப்படி ஒரு விதிமீறலுக்கு ஆளாகி வருகிறார்கள். அப்படி இருக்கையில் எப்போதோ ஒருமுறை இந்தப்பக்கம் வரும் துல்கர் சல்மானுக்கும் அந்த குழப்பம் ஏற்பட்டதில் ஆச்சர்யம் இல்லை என்று விளக்கம் கூறியுள்ளார்.