கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
சமீபத்தில் சோஷியல் மீடியாவில் துல்கர் சல்மான் குறித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருவதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஆழப்புழா பகுதியில் படப்பிடிப்புக்காக சென்ற துல்கர் சல்மான், பைபாஸ் ரோட்டில், சாலை விதிகளை மீறி, வாகனங்கள் வரும் எதிர் திசையில் தனது காரை ஓட்டிச்சென்று சிக்னலில் நிறுத்தியுள்ளார். அங்கிருந்த போக்குவரத்து காவலர், காரை பின்னால் எடுத்துச்சென்று, வரிசையில் வருமாறு துல்கரிடம் கூறியுள்ளார்,
உடனே சினிமாவில் வருவது போல, படு ஸ்பீடாக காரை ரிவர்ஸ் எடுத்து, கிட்டத்தட்ட 50 மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று, மீண்டும் சரியான திசையில் பறந்துள்ளார் துல்கர் சல்மான். அந்த பகுதியில் டூவீலரில் பயணித்த நபர் ஒருவர் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். போக்குவரத்து காவலர் சொன்னதை துல்கர் சல்மான் ஏற்றுக்கொண்டாலும், அவர் தெரிந்தே சாலை விதிகளை மீறியது தவறு என்று சிலர் துல்கரின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.
அதேசமயம் ரசிகர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, “ஆழப்புழா பைபாஸ் சாலையில், குறிப்பாக இந்த சிக்னலில், முறையான கைகாட்டி பலகைகள் வைக்கப்படாததால், உள்ளூர்வாசிகளே தங்களை அறியாமல் அடிக்கடி இப்படி ஒரு விதிமீறலுக்கு ஆளாகி வருகிறார்கள். அப்படி இருக்கையில் எப்போதோ ஒருமுறை இந்தப்பக்கம் வரும் துல்கர் சல்மானுக்கும் அந்த குழப்பம் ஏற்பட்டதில் ஆச்சர்யம் இல்லை என்று விளக்கம் கூறியுள்ளார்.