இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இதையடுத்து சிரஞ்சீவியின் 153வது படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்க உள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் ரீமேக் ஆக இந்தப்படம் உருவாகிறது.
இன்னும் 152வது படம் முடிவடையாத நிலையில் 153வது படம் துவங்கப்படாத நிலையில் அவரது 154வது படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா (பாபி) என்பவர் இயக்க உள்ளார் என்கிற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 'உப்பென்னா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது, மேடையில் தானாகவே இதனை அறிவித்த சிரஞ்சீவி, இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது என்பதையும் அறிவித்தார்.
கன்னடம் மற்றும் தெலுங்கில் பிரபல கதாசிரியராக விளங்குபவர் இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா. கடந்த சில வருடங்களுக்கு முன் ரவிதேஜா நடித்த பவர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், பவன் கல்யாணின் கப்பார் சிங், ஜூனியர் என்.டி.ஆரின் ஜெய் லவகுசா மற்றும் வெங்கடேஷ் நடித்த வெங்கி மாமா ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.