கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வளம் வந்தாலும் கூட நடிகை ஆலியா பட்டுக்கு குழந்தை மனம் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த மாதம் ஐராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்த அவர், நடிகர் மகேஷ்பாபுவின் வீட்டுக்கு சென்று அவரது மகள் சிறுமி சித்தாராவை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு தான் வாங்கிச்சென்றிருந்த ஆடையை பரிசளித்தார்.
இதோ இப்போது துல்கர் சல்மானின் மூன்று வயது மகளான மரியமுக்கு அழகழான ஆடைகளை கிப்ட் பார்சலாக அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பி வைத்த ஆடைகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் துல்கர் சல்மான். துல்கரும் ஆலியாவும் இணைந்து படம் எதிலும் நடித்ததில்லை. மிகப்பெரிய பழக்கமும் இல்லை.. பின் ஏதற்காக கிப்ட் அனுப்பியுள்ளார் தெரியுமா..?
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் துல்கர் சல்மான் அளித்த ஒரு பேட்டியில், தனது மகளை ஆலியா பட் போல வளர்க்க போகிறேன் என கூறியிருந்தார். அந்த பேட்டியை ஏதேச்சையாக பார்த்த ஆலியா பட், துல்கர் சல்மானின் அந்த வார்த்தைகளில் நெகிழ்ந்து போய், அவரது மகளுக்கு ஆடைகளை பரிசாக அனுப்பி வைத்தாராம்.