7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான 'திரிஷ்யம்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மலையாள சினிமாவின் முதல் 50 கோடி வசூல் படம் என்கிற பெருமையை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் ஓடிடியில் வெளியானாலும் கூட அந்த படமும் முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தில் தனது மனைவி கொலை செய்த போலீஸ் அதிகாரியின் மகன் உடலை, மோகன்லால் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவாறு போலீஸ் ஸ்டேஷனுக்குள் அதுவும் இன்ஸ்பெக்டர் அறையில் புதைத்து வைப்பார். இந்த விஷயம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியதுடன் இப்படி ஒரு கிளைமாக்ஸை வைத்ததற்காக ஜீத்து ஜோசப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்திற்காக முதலில் தான் யோசித்து வைத்திருந்த கிளைமாக்ஸ் வேறு என்று கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் இறுதி காட்சியில் இறந்த இளைஞனின் உடலை ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு அந்த இடத்தின் மேலேயே நின்று மோகன்லாலும் அந்த இளைஞனின் பெற்றோரும் உருக்கமாக பேசுவது போல தான் கிளைமாக்ஸ் காட்சியை உருவாக்கி இருந்தேன். ஆனால் அது ஏதேச்சையாக அமைந்தது போல இல்லாமல் சுவாரசியத்திற்காக ஏதோ தற்செயலாக திணிக்கப்பட்டது போல எனக்கு தோன்றியது. அந்த சமயத்தில் நான் கேரள போலீஸுக்காக ஒரு டாக்குமென்டரி படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்கு திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே அந்த உடலை புதைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் பிறகு தான் படத்தின் கிளைமாக்ஸை மாற்றினேன்” என்று கூறியுள்ளார்.