கலைமாமணி விருது : ஜெயப்பிரியா விக்ரமன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: முதல் திரைப்படக் கல்லூரி மாணவன் தந்த முழுமையான கலைப்படைப்பு “அவள் அப்படித்தான்” | எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி, விக்ரம்பிரபு, லிங்குசாமி, அனிருதுக்கு கலைமாமணி விருது : பாடகர் கே.கே.ஜேசுதாஸிற்கும் கவுரவம் | ஓஜி : கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி | 'மனதை திருடி விட்டாய்' நாராயணமூர்த்தி காலமானார் | தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் |
பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளம், ஹிந்தி என இரண்டு மொழிகளில் மாறி மாறி படங்களை இயக்கி வருகிறார். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக அவரை வைத்து கிட்டத்தட்ட 33 படங்களுக்கு மேல் இயக்கிவிட்டார் பிரியதர்ஷன். அதேபோல பாலிவுட்டில் பெரும்பாலும் நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்த படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது கூட 'ஹைவான்' என்கிற படத்தை அக்ஷய் குமாரை வைத்து தான் இயக்கி வருகிறார்.
அதே சமயம் 2000 துவக்கத்தில் சல்மான்கானை வைத்து இரண்டு படங்களையும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தையும் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட போது, நிருபர் ஒருவர் இவரிடம் பத்மஸ்ரீ விருது கிடைத்ததை பெரிய சாதனையாக நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, “நிச்சயமாக இல்லை.. கோவிந்தாவும் சல்மான் கானும் இணைந்து நடித்த ஒரு படத்தை இரண்டு ஷெட்யூல்களுக்குள் என்னால் முடிக்க முடிந்தது. அதைத்தான் மிகப்பெரிய சாதனையாக நான் நினைக்கிறேன். காரணம் அவர்கள் சரியான நேரத்திற்கு படத்திற்கு வர மாட்டார்கள் என்று அப்போது பேச்சு இருந்தது.
ஆனால் இருவருமே பழகுவதற்கு இனிமையானவர்கள். என்னுடைய படப்பிடிப்பிற்கு காலை 7 மணிக்கே வந்து விடுவார்கள். ஆனால் அப்போது சல்மான்கான் என்னிடம், “சார் நீங்கள் என்னை வைத்து அடுத்த படத்தை இயக்கினால் நிச்சயமாக நான் செட்டுக்கு காலை 5 மணிக்கெல்லாம் வரமாட்டேன்” என்று கூறியதாக சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.