இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை பார்வதி மலையாளத்தில் தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஊரடங்கு தளர்வுக்கு பின் அவர் நடித்த படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. இந்தநிலையில் இந்தப்படத்திற்கு 'ஆர்க்கறியாம்' (யாருக்கு தெரியும்) என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்தப்படத்தின் டீசரை கமல்ஹாசன் மற்றும் பஹத் பாசில் இருவரும் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்,
உத்தமவில்லன் படத்தில் கமலின் மகளாக பார்வதி நடித்திருந்தார் என்றாலும், கமல் இந்த படத்தின் டீசரை வெளியிட்டது படத்தின் இயக்குனர் மற்றும் எடிட்டர் இருவரின் நட்புக்காகத்தான். ஆம்.. கமலின் விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷானு ஜான் வர்கீஸ் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மகேஷ் நாராயணன் தான் இந்தப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
பிஜுமேனன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் வரும் பிப்-26ல் ரிலீஸாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் ஆரம்பித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் மும்பையிலிருந்து கேரளாவுக்கு, ரயிலில் பயணிக்கும் ஒரு தம்பதி, ஊரடங்கால் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.