புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
நடிகை பார்வதி மலையாளத்தில் தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஊரடங்கு தளர்வுக்கு பின் அவர் நடித்த படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. இந்தநிலையில் இந்தப்படத்திற்கு 'ஆர்க்கறியாம்' (யாருக்கு தெரியும்) என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்தப்படத்தின் டீசரை கமல்ஹாசன் மற்றும் பஹத் பாசில் இருவரும் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்,
உத்தமவில்லன் படத்தில் கமலின் மகளாக பார்வதி நடித்திருந்தார் என்றாலும், கமல் இந்த படத்தின் டீசரை வெளியிட்டது படத்தின் இயக்குனர் மற்றும் எடிட்டர் இருவரின் நட்புக்காகத்தான். ஆம்.. கமலின் விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷானு ஜான் வர்கீஸ் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மகேஷ் நாராயணன் தான் இந்தப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
பிஜுமேனன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் வரும் பிப்-26ல் ரிலீஸாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் ஆரம்பித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் மும்பையிலிருந்து கேரளாவுக்கு, ரயிலில் பயணிக்கும் ஒரு தம்பதி, ஊரடங்கால் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.