இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தற்போது கொரோனா தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், திரையரங்குகள் திறக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் நல்ல வசூலை பெற்றுள்ளதுடன் பார்வையாளர்களையும் அதிக அளவில் தியேட்டருக்கு அழைத்து வந்துள்ளது. அதேசமயம் மாஸ்டருக்கு சில நாட்கள் முன்னதாக அதாவது ஜன-9ஆம் தேதி, தெலுங்கில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் நடித்த கிராக் என்கிற படம் வெளியானது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களையே தந்து வந்த ரவிதேஜாவுக்கு சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்து அவரது இடத்தை நிலைநிறுத்தியுள்ள இந்தப்படம் தற்போதுவரை சுமார் 5௦ கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தப்படத்துடன் வெளியாகிய ரெட் என்கிற படத்தை தவிர்த்து அடுத்தடுத்து வெளியான மற்ற படங்கள் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.. இதனையடுத்து கிராக் படம் ஓடும் தியேட்டர்களின் எண்ணிக்கை தற்போது இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரவிதேஜாவின் படங்கள் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்க இயலாமல் தியேட்டரில் இருந்து வெளியேறிய சூழலே கடந்த சில வருடங்களாக நிலவியது.. ஆனால் தற்போது, அவர் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து, அதிலும் 5௦ சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த நிலையில், இன்னும் கூடுதலாக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை தெலுங்கு திரையுலகினர் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள்.