இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
த்ரிஷ்யம் -2 படப்பிடிப்பை முடித்துவிட்ட மோகன்லால் தற்போது ஆராட்டு என்கிற படத்தில் முழுவீச்சில் நடித்து வருகிறார். ஏற்கனவே மிஸ்டர் பிராடு, வில்லன் உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கிய மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். மோகன்லாலின் திரையுலக பயணத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்த 'புலிமுருகன்' பட கதாசிரியர் உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இந்தப்படத்தில் கேஜிஎப் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்த நடிகர் கருடா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தில் இவர் மெயின் வில்லன் இல்லை என்றாலும் மோகன்லாலும் இவரும் மோதும் காட்சிகள் உண்டு என்கிறார் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். ஆராட்டு படப்பிடிப்பு தளத்தில் மோகன்லால், கருடா ராம் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.