'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இந்திய சினிமாவையும், போதை பொருளையும் பிரிக்க முடியாது என்கிற அளவிற்கு சினிமாவுக்கும், போதை பழக்கத்துக்கும் நெருக்கம் இருப்பது வெட்டவெளிச்சமாகி இருகிறது. வட இந்திய சினிமாவில் ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தென் இந்தியாவில் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது மேலும் ஒரு தெலுங்கு நடிகை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மும்பையில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில் போதை பொருள் புழக்கம் தாராளமாக நடப்பதாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது கணிசமான போதை பொருட்களுடன் பெண் ஒருவர் சிக்கினார். அவர் அங்குள்ள விவிஐபிக்களுக்கு சப்ளை செய்வதற்காக வந்தவர் என்றும் தெரிந்தது.
போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவரது பெயர் சுவேதா குமாரி என்பதும், அவர் ரிங் மாஸ்டர் என்ற கன்னடப் படத்திலும், தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் 2வது நாயகியாக நடித்திருப்பதும் தெரிய வந்தது. சுவேதாவிடம் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.