மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தெலுங்கு சினிமாவில் புதிது புதிதாக இளம் நடிகர்கள் வந்தாலும் இன்றும் மாஸ் குறையாத சீனியர் நடிகராக தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் பாலகிருஷ்ணா. படங்களில் இவரது அதிரடியான சண்டைக் காட்சிகளும் வசனங்களும் தெலுங்கையும் தாண்டி இவருக்கு ரசிகர்களை பெற்று தந்துள்ளன. அதுமட்டுமல்ல கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் ஆந்திராவில் உள்ள ஹிந்துப்பூர் தொகுதியில் எம்எல்ஏ.,வாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பாலகிருஷ்ணா.
இந்த நிலையில் சமீபத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொகுதியில் பஸ் போக்குவரத்தில் பெண்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார் பாலகிருஷ்ணா. வெறுமனே கொடியசைத்து திட்டத்தை துவக்கி வைக்காமல் பேருந்திலேயே ஏறி ஓட்டுனராக மாறி அரசு பேருந்தை சிறிது தூரம் இயக்கியும் காட்டினார் பாலகிருஷ்ணா. கூடியிருந்த பொதுமக்களும் அவரது ரசிகர்களும் அவர் பேருந்து ஓட்டுவதை பார்த்து உற்சாக குரல் எழுப்பினார்கள். மக்களும் ரசிகர்களும் பாராட்டினாலும் கூட ஒருவேளை பாலகிருஷ்ணா இப்படி அரசு பேருந்து ஓட்டியது தவறான செயல் என்று கூட யாரேனும் வழக்கு தொடரவும் வாய்ப்பு இருக்கிறது.