மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி, நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த வருடமே வெளியாகிவிட்டது. இந்தப் படம் காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்தி ஒரு பிக்ஷன் படமாக உருவாக இருக்கிறது என்று படத்தின் கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராஜமவுலி புகழ்பெற்ற ஆப்பிரிக்க நாவலாசிரியரான வில்பர் ஸ்மித் எழுதிய டிரையம்ப் ஆப் தி சன் மற்றும் கிங் ஆப் கிங்ஸ் என்கிற இரண்டு நாவல்களின் உரிமையை வாங்கியுள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டது என விஜயேந்திர பிரசாத் கூறியுள்ள நிலையில் இயக்குனர் ராஜமவுலி இந்த இரண்டு நாவல்களை வாங்கியுள்ளது மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்காகவா அல்லது எதற்காக என்கிற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. அதேசமயம் கதை வேலைகள் முடிந்தாலும் ஆப்பிரிக்க காடுகளில் காட்சிகளை படமாக்குவதற்கு ஒரு விஷன் தேவைப்படுவதால் இந்த நாவல்களை ராஜமவுலி வாங்கி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.