காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலுக்கு அடுத்தபடியாக இருப்பவர் நடிகர் திலீப். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்தாலும் இவரது திரையுலக பயணம் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் இவரும் தமன்னாவும் இணைந்து நடித்த பாந்த்ரா என்கிற படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானாலும் ஓரளவு தான் அந்த படம் வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்ததாக தங்கமணி என்கிற படத்தில் நடித்து வருகிறார் திலீப். ஒரு கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்து உண்மை கதையாக இந்த படம் தயாராகி வருகிறது.
இப்படி சமீபகாலமாக சீரியஸான படங்களில் நடித்து வந்த திலீப் மீண்டும் தனது வழக்கமான காமெடி பாணிக்கு திரும்பியுள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு பவி கேர்டேக்கர் என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது திலீப்பின் 149வது படம் ஆகும். முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை, நடிகராக இருந்து இயக்குனராக மாறிய வினீத் குமார் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த ஆயாள் நானல்ல என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.