'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் பந்த்லா கணேஷ். ஜூனியர் என்டிஆர் நடித்த டெம்பர், பாட்ஷா, பவன் கல்யாண் நடித்த கப்பார் சிங் என பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்துள்ளார். ஒரு நடிகராகவும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட செக் மோசடி வழக்கில் தற்போது இவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெட்டி வெங்கடேஸ்வரா என்பவரிடம் தான் வாங்கிய 95 லட்சம் ரூபாய் தொகைக்காக காசோலை ஒன்றை வழங்கியுள்ளார் பந்த்லா கணேஷ். ஆனால் அவரது கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பந்த்லா கணேஷ் மீது நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த வழக்கில் பந்த்லா கணேஷுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் இது குறித்து அப்பீல் செய்வதற்கு அவருக்கு ஒரு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.