காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நேற்று டில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இதில் 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இதில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற இசை யமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதேபோல் சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதை அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நடிகை ரவீனா டாண்டனும் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
பத்மக்ஷ விருது பெற்ற கீரவாணி உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛என் பெத்தண்ணாவை(பெரிய அண்ணன்) நினைத்து பெருமைப்படுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் ராஜமவுலி.




