இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நேற்று டில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இதில் 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இதில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற இசை யமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதேபோல் சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதை அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நடிகை ரவீனா டாண்டனும் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
பத்மக்ஷ விருது பெற்ற கீரவாணி உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛என் பெத்தண்ணாவை(பெரிய அண்ணன்) நினைத்து பெருமைப்படுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் ராஜமவுலி.