பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழில் விஷால் நடித்த ஆக்சன் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி. அதன்பிறகு தனுஷுடன் ஜகமே தந்திரம் என்கிற படத்தில் நடித்தார். இருந்தாலும் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் சமுத்திர குமாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ஐஸ்வர்ய லட்சுமி.
தற்போது வெளியாகி உள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படம் முழுவதும் இவரது கதாபாத்திரத்தை மையப்படுத்தியே உருவாகியுள்ளது.
இது ஒரு பக்கமிருக்க மலையாளத்திளும் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்ய லட்சுமி. அதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கிங் ஆப் கோத என்கிற படத்தில் நடித்து வரும் இவர், இன்னொருபக்கம் பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் கிறிஸ்டோபர் படத்திலும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.
தான் சிறுவயதிலிருந்தே மம்முட்டி ரசிகை என கூறி வரும் ஐஸ்வர்ய லட்சுமி, அவருடன் நடிக்கும் கனவு நிறைவேறியது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அதேசமயத்தில் அவரது மகன் துல்கர் சல்மான் படத்திலும் ஒரே சமயத்தில் நடித்து வருவது எதிர்பாராத ஒன்று என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.