புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமா என்பது மட்டும்தான் கடந்த பல ஆண்டு காலமாக இருந்து வந்தது. வெளிநாடுகளில் இந்திய சினிமா என்றால் பாலிவுட் என்று மட்டும்தான் தெரியும். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களைக் கூட 'பாலிவுட் மூவிஸ்' என்றுதான் அழைப்பார்கள். ஆனால், ரஜினிகாந்தின் 'சிவாஜி' படம் அதில் ஒரு மாற்றத்தை ஆரம்பித்து வைத்தது. அதன் பிறகு ராஜமவுலியின் 'பாகுபலி' அந்த மாற்றத்தை இன்னும் அழுத்தமாகப் பதிய வைத்தது.
இந்த வருடத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்,' கன்னடப் படமான 'கேஜிஎப் 2', தமிழ்ப் படமான 'பொன்னியின் செல்வன்' ஆகியவை உலக அளவிலும் வசூலைக் குவித்து ஹிந்திப் படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலித்தது.
'கேஜிஎப் 2' படத்தின் வெற்றி இந்திய சினிமாவை கன்னட சினிமா பக்கம் இன்னும் அதிகமாகத் திரும்பிப் பார்க்க வைத்தது. அதற்கடுத்து தற்போது 'கன்டரா' படம் அதைத் தொடர்கிறது. செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த இந்தப் படம் விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த பத்து நாட்களில் 50 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்படத்தை கர்நாடகா தவிர மற்ற மாநில ரசிகர்களும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
தென்னிந்திய சினிமாக்களில் அதிகமான வசூல் படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்கள் முன்னிலை வகித்தன. தரமான படங்களில் மலையாள சினிமா முன்னிலை வகித்தது. இப்போது வசூல், தரம் என இரண்டிலும் மற்ற தென்னிந்திய சினிமாக்களுடன் போட்டி போடும் அளவிற்கு கன்னட சினிமா வளர்ந்து வருவது அவர்களுக்குப் பெருமையைக் கொடுத்து வருகிறது. மற்ற மொழி திரையுலகினருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.