புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
அங்கமாலி டைரீஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா ராஜன். அதன்பிறகு வெளிபாடின்டெ புஸ்தகம், மதுர ராஜா, ஐயப்பனும் கோஷியும் உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். தனியார் செல்போன் நிறுவன ஊழியர்களால் அன்னா சிறை வைக்கப்பட்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
டூப்ளிகேட் சிம் வாங்குவதற்காக நேற்று கொச்சி ஆலுவா பகுதியில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சென்று உள்ளார் அன்னா. புதிய சிம் கார்டு வாங்குவது தொடர்பாக அங்கிருந்த ஒரு பெண் ஊழியருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே மற்ற ஊழியர்கள் சேர்ந்து நிறுவனத்தின் ஷட்டரை இழுத்து பூட்டி நடிகை அன்னாவை சிறை வைத்தனர். உடனே தன்னிடமிருந்த செல்போன் மூலம் நண்பர்களை அழைத்துள்ளார் அன்னா. நண்பர்கள் வந்து அவரை மீட்டுள்ளனர். இது தொடர்பாக அன்னா போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அன்னா புகாரை வாபஸ் பெற்றார்.