இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
அங்கமாலி டைரீஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா ராஜன். அதன்பிறகு வெளிபாடின்டெ புஸ்தகம், மதுர ராஜா, ஐயப்பனும் கோஷியும் உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். தனியார் செல்போன் நிறுவன ஊழியர்களால் அன்னா சிறை வைக்கப்பட்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
டூப்ளிகேட் சிம் வாங்குவதற்காக நேற்று கொச்சி ஆலுவா பகுதியில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சென்று உள்ளார் அன்னா. புதிய சிம் கார்டு வாங்குவது தொடர்பாக அங்கிருந்த ஒரு பெண் ஊழியருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே மற்ற ஊழியர்கள் சேர்ந்து நிறுவனத்தின் ஷட்டரை இழுத்து பூட்டி நடிகை அன்னாவை சிறை வைத்தனர். உடனே தன்னிடமிருந்த செல்போன் மூலம் நண்பர்களை அழைத்துள்ளார் அன்னா. நண்பர்கள் வந்து அவரை மீட்டுள்ளனர். இது தொடர்பாக அன்னா போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அன்னா புகாரை வாபஸ் பெற்றார்.