பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாள திரையுலகில் தொண்ணூறுகளில் மும்மூர்த்திகள் என சொல்லப்பட்டவர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி. ஆனால் மோகன்லாலும் மம்முட்டியும் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் பலவித பொறுப்புகள் வகித்து ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.. ஆனால் 90களில் வெளிநாட்டிற்கு சென்று கலை நிகழ்ச்சி நடத்துவதில் சுரேஷ்கோபிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் சங்கம் சம்பந்தமான எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதை சுரேஷ்கோபி தவிர்த்து வந்தார்.
குறிப்பாக நடிகர் சங்கம் பக்கமாக கடந்த 20 வருடமாக அவர் வரவே இல்லை. இந்த நிலையில் தனது மனக்கசப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு வருகை தந்தார் சுரேஷ்கோபி. 20 வருடம் கழித்து நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த அவரை சங்க உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வில் வில்லன் நடிகர் பாபுராஜ், நடிகை ஸ்வேதா மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.