'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
மலையாளத்தில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய்பாபு. பிரைடே பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்த இவர், இன்னொரு பக்கம் பிசியான நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து சம்பந்தப்பட்ட நடிகை தனது சோசியல் மீடியா பக்கத்தில் மிக விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் விஜய்பாபு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தனது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தன்னை பலவந்தமாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அந்த பதிவில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “ஏற்கனவே விஜய்பாபு தயாரிப்பில் ஒரு படத்தில், நான் நடித்துள்ளேன். அந்த படப்பிடிப்பு நடந்த சமயத்தில் எனது நன்மதிப்பைப் பெறும் விதமாக நடந்து கொண்ட விஜய்பாபு கொஞ்சம் கொஞ்சமாக என்னை அவர் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி பலமுறை என்னை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.. மேலும் இதை வைத்து என்னை தொடர்ந்து தனது ஆசைக்கு அடிபணிய வைப்பதுடன் என்னுடைய திரையுலக முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லாக இருக்கிறார். இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
இதேபோல பல பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளது தெரிய வந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அதனாலேயே அவரது உண்மை சொரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என்று இவர் மீது வழக்கு தொடுத்துள்ளேன். இவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் புதுசாக வெளியே வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட நீதி பற்றி பேச வேண்டுமென்று அதில் கூறியுள்ளார்