எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் என மூன்று கலை குடும்பங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவு செல்வாக்கு கொண்ட குடும்பமாக நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம் திகழ்கிறது. சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து அவரது தம்பிகளான பவன் கல்யாண், நாக பாபு, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரிகளின் மகன்கள், சிரஞ்சீவியின் மைத்துனர் மகனான அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ் என பலர் தெலுங்கு திரையுலகில் நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் அனைவருடனும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஒரு முறை ருத்ரவீணா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான நர்கீஸ் தத் விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இதை பெறுவதற்காக அவர் மும்பை சென்றபோது அந்த விழாவில் தான் ஏதோ ஒரு புதிய நடிகர் போல அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்துள்ளார் சிரஞ்சீவி.
அந்த விழாவில் பாலிவுட்டை சேர்ந்த கபூர் குடும்பத்தின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருந்ததாகவும் பின்னர் தனது தம்பி பவன் கல்யாணிடம் ஒருமுறை சிரஞ்சீவி கூறும்போது தென்னிந்தியாவின் கபூர் குடும்பம் போல நம் குடும்பம் திகழ வேண்டும் என தான் விரும்புவதாக கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.