நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் என மூன்று கலை குடும்பங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவு செல்வாக்கு கொண்ட குடும்பமாக நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம் திகழ்கிறது. சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து அவரது தம்பிகளான பவன் கல்யாண், நாக பாபு, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரிகளின் மகன்கள், சிரஞ்சீவியின் மைத்துனர் மகனான அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ் என பலர் தெலுங்கு திரையுலகில் நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் அனைவருடனும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஒரு முறை ருத்ரவீணா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான நர்கீஸ் தத் விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இதை பெறுவதற்காக அவர் மும்பை சென்றபோது அந்த விழாவில் தான் ஏதோ ஒரு புதிய நடிகர் போல அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்துள்ளார் சிரஞ்சீவி.
அந்த விழாவில் பாலிவுட்டை சேர்ந்த கபூர் குடும்பத்தின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருந்ததாகவும் பின்னர் தனது தம்பி பவன் கல்யாணிடம் ஒருமுறை சிரஞ்சீவி கூறும்போது தென்னிந்தியாவின் கபூர் குடும்பம் போல நம் குடும்பம் திகழ வேண்டும் என தான் விரும்புவதாக கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.