இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் மலையாளம் என பிசியாக இருந்த நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிகழ்வு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் மூன்று மாத காலம் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை கொல்வதற்கு திட்டமிட்டதாக திலீப் மீது மீண்டும் வேறு ஒரு வழக்கு பதியப்பட்டு அதிலும் திலீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் திலீப் முதலில் தன் மீது பதியப்பட்ட நடிகை கடத்தல் வழக்கில் கிட்டத்தட்ட முழு விசாரணை முடிந்துவிட்ட நிலையில், தற்போது அடுத்தடுத்த விசாரணைகள் நடப்பது வழக்கை திசை திருப்புவதாக இருக்கிறது.. எனவே மேற்கொண்டு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.. அப்படி இல்லை என்றால் அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அந்த முதல் வழக்கில் மேற்கொண்டு புதிய சாட்சிகளிடம் விசாரணை செய்வதில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ள நீதிமன்றம் அதே சமயம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் அந்த வழக்கு விசாரணை முழுவதையும் முடிக்க வேண்டுமென போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளது.