ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மம்முட்டி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் சிபிஐ 5. ஏற்கனவே நான்கு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 17 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் மம்முட்டி.
இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மம்முட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் தொற்றிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தெரிகிறது. தான் ஏற்கனவே நடித்து வந்த சிபிஐ 5 படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி மீண்டும் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை படத்தின் இயக்குனர் கே.மது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.