புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
மலையாள நடிகர் திலீப், நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறை சென்று, பின் ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் அவர் மீது இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் கூறிய சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என நினைத்து முன் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் நடிகர் திலீப். இந்த மனுவின் மீதான விசாரணை ஒவ்வொரு முறையும் தள்ளி வைக்கப்பட்டு இதுவரை நான்கு முறை விசாரணை தள்ளிப்போய் உள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் போலீசார் முன்னிலையில் மூன்று நாட்களுக்கு திலீப் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அந்த விசாரணை அறிக்கை ஜனவரி 27 க்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் திலீப்பிடம் மூன்று நாட்கள் விசாரணை முடிந்து அதன் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணை தரப்பு இன்னும் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளது. அதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம், வரும் பிப்ரவரி-2ல் பிறப்பின் முன் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.