திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
கடந்த சில வருடங்களுக்கு முன் தென்னிந்திய மொழிகளில் அனைத்திலும் வெளியாகி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த படம் 'கேஜிஎப் - சாப்டர் 1'. இந்தப்படத்தை பிரமிக்க வைக்கும் வகையில் படமாக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்துவிட்டு தற்போது தெலுங்கில் பிரபாஸை வைத்து 'சலார்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தை முடித்த பின்னர் அவர் அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தசரா பண்டிகை தினமான நேற்று ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டுக்கு சென்ற இயக்குனர் பிரசாந்த் நீல் அங்கே சிரஞ்சீவியிடமும் ராம்சரணிடமும் கதை குறித்து விவாதித்துள்ளார். அப்போது அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார் பிரசாந்த் நீல். இந்தப்படத்தை டிவிவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.