மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி |
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் டில்லியில் உள்ள மால் ஒன்றில் அமைந்துள்ள பப் ஒன்றுக்கு சென்றபோது தாக்கப்பட்டார் என்பது போன்று ஒரு வீடியோவும், அதுகுறித்த செய்தியும் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஆனால் இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என அஜய் தேவ்கன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஜய் தேவ்கன் குழுவினர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஆதாரமற்ற செய்திகளையும் யாரோ தாக்கப்பட்டதை அஜய் தேவகன் தாக்கப்பட்டது போன்று தவறாக சித்தரித்தும் வதந்திகளை பரப்ப வேண்டாம். அஜய் தேவ்கன் டில்லிக்கே போகவில்லை. கொரோனா தாக்கம் துவங்கியதிலிருந்து கடந்த பதினான்கு மாதங்களாக அவர் மும்பையில் தான் இருக்கிறார். பின் எப்படி அவர் டில்லியில் தாக்கப்பட்டிருக்க முடியும்..?” என அதில் கூறியுள்ளனர்.