பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை பிரியாமணி நடிப்பில் தெலுங்கில் விராட பர்வம் மற்றும் ஹிந்தியில் மைதான் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. இதில் ஹிந்தியில் இவர் நடிக்கும் மைதான் படம் கால்பந்து விளையாட்டு பின்னணியில் அறுபதுகளில் நிகழும் கதை. பிரபல கால்பந்து கோச் சையது அப்துல் ரஹீம் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கோச் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனும், அவரது மனைவியாக பிரியாமணியும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் அஜய் தேவ்கன் கதாபாத்திரம் பற்றி பிரியாமணி கூறும்போது, “படத்தில் அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்துள்ளேன்.. கதைப்படி அஜய் தேவ்கன் ஆங்கிலத்தை ரொம்பவே நேசிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எந்த அளவுக்கு என்றால், கடைக்கு ஷாப்பிங் போகும்போது அம்மாவுக்கும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் கிப்ட் பொருட்கள் வாங்கினாலும் மனைவியான எனக்கு ஆங்கில டிக்சனரியை வாங்கி தருவார்.. எதற்காக என நான் கேட்டதற்கு, பிழையில்லாமல் நன்றாக ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக என பதில் கூறுவார். அந்த அளவுக்கு அவர் ஆங்கிலத்தை நேசிப்பவராக நடித்துள்ளார்” என கூறுகிறார் பிரியாமணி.




