அல்லு அர்ஜுனின் அடுத்த படம் சரித்திரப் படம்? | அம்மா ஆகப் போகும் கியாரா அத்வானி : வாழ்த்திய சமந்தா, ராஷ்மிகா | நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது : அமிதாப்பச்சனின் பதிவால் பரபரப்பு! | கிரிப்டோ கரன்சி முறைகேடு குற்றச்சாட்டு : தமன்னா விளக்கம் | இர்பான் கான் நினைவாக தங்கள் கிராமத்திற்கு புதிய பெயர் சூட்டிய மக்கள் | கருப்பை வெள்ளையாக்க அதிக படங்களில் நடிக்கிறேனா? : டென்ஷனான வாரிசு நடிகர் | ராஜ்குமாரின் 50வது பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் ஆகும் அப்பு | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த மோகன்லால், சீனிவாசன் கூட்டணி | தகராறை முடித்துக் கொண்ட கங்கனா ரணவத், ஜாவேத் அக்தர் | கெட்டிமேளம் தொடரில் என்ட்ரி கொடுக்கும் கன்னட நடிகை |
தமிழில் 'பருத்திவீரன்' படத்தில் நடித்து பிரபலமானது மட்டுமல்ல அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர் நடிகை பிரியாமணி. தற்போது திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் ஆகியவற்றில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மலையாளத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் 'ஆபிசர் ஆன் டூட்டி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்துள்ள இந்த படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரியாமணி பேசும்போது மோகன்லாலிடமிருந்து தான் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.
மோகன்லாலும் பிரியாமணியும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வெளியான 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்' என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். இது பற்றி அவர் கூறும் போது, “மோகன்லால் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் படத்தில் நடித்தபோது அவரது தாயார் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் கூட மோகன்லால் 6 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். மாலை படப்பிடிப்பு முடிவடைந்ததும் நேராக தனது தாயை கவனிக்க மருத்துவமனைக்கு சென்று விடுவார். அங்கேயே தங்கியிருந்து மறுநாள் அங்கிருந்தே படப்பிடிப்புக்கு தயாராகி கிளம்பி வந்து விடுவார்.
இதைப் பார்த்து நான் ரொம்பவே வியந்து போனேன். ஒருநாள் அவரிடம் கூட நீங்கள் ஒரு நாளாவது விடுமுறை எடுத்துக் கொண்டு அம்மாவின் அருகிலேயே இருந்து அவரை பார்த்துக் கொள்ளக் கூடாதா என்று கேட்டேன். அதற்கு அவர் நான் தொழிலையும் குடும்பத்தையும் ஒன்றாக எப்போதும் கலப்பது இல்லை. என்னால் என் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பாக இயக்குனர் பாதிக்கப்படக்கூடாது. எனக்காக யாரும் காத்திருக்கக்கூடாது.
படப்பிடிப்புக்கு வந்து விட்டால் குடும்பத்தை பற்றி யோசிக்க மாட்டேன். அதே போல இப்போது மருத்துவமனைக்கு சென்று விட்டால் சினிமாவைப் பற்றி யோசிக்க மாட்டேன்.. என் குடும்பம் தான் கண் முன்னே இருக்கும்.. இரண்டையும் சமமாக பிரித்து வைத்திருக்கிறேன் என்று கூறினார். அந்த அளவுக்கு சினிமாவை அர்ப்பணிப்புடன் அவர் நேசித்து வந்ததை பார்த்து அதிலிருந்து நானும் புதிய பாடம் ஒன்றை கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார் பிரியாமணி.