'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
ஒரு காலத்தில் சினிமாவில் கதாநாயகிகளுக்குள் ஒரு பொறாமை இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் இல்லாமல் பலரும் நட்பாகவே பழகுகிறார்கள். ஒருவரை மற்றொருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் சமந்தா சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் 'சாட்' செய்தார். அப்போது அவருக்குப் பிடித்தமான கதாநாயகிகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு வெளிப்படையான பதிலளித்துள்ளார்.
“சிலரது நடிப்பு என்னை சமீபத்தில் வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் பெண்களின் நடிப்பை நேசித்தேன், அவர்கள் எடுத்த ரிஸ்க்கும் நேசிக்க வைத்தது. 'உள்ளொழுக்கு' படத்தில் பார்வதி, 'சூக்ஷ்ம தர்ஷினி' படத்தில் நஸ்ரியா, 'அமரன்' படத்தில் சாய் பல்லவி, 'ஜிக்ரா' படத்தில் ஆலியா பட், 'CTRL' படத்தில் அனன்யா பாண்டே, 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்' படத்தில் கனி, திவ்ய பிரபா, ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்த ஆண்டும் அவர்களது சிறந்த படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.