வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஒரு காலத்தில் சினிமாவில் கதாநாயகிகளுக்குள் ஒரு பொறாமை இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் இல்லாமல் பலரும் நட்பாகவே பழகுகிறார்கள். ஒருவரை மற்றொருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் சமந்தா சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் 'சாட்' செய்தார். அப்போது அவருக்குப் பிடித்தமான கதாநாயகிகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு வெளிப்படையான பதிலளித்துள்ளார்.
“சிலரது நடிப்பு என்னை சமீபத்தில் வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் பெண்களின் நடிப்பை நேசித்தேன், அவர்கள் எடுத்த ரிஸ்க்கும் நேசிக்க வைத்தது. 'உள்ளொழுக்கு' படத்தில் பார்வதி, 'சூக்ஷ்ம தர்ஷினி' படத்தில் நஸ்ரியா, 'அமரன்' படத்தில் சாய் பல்லவி, 'ஜிக்ரா' படத்தில் ஆலியா பட், 'CTRL' படத்தில் அனன்யா பாண்டே, 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்' படத்தில் கனி, திவ்ய பிரபா, ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்த ஆண்டும் அவர்களது சிறந்த படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.