பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஒரு காலத்தில் சினிமாவில் கதாநாயகிகளுக்குள் ஒரு பொறாமை இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் இல்லாமல் பலரும் நட்பாகவே பழகுகிறார்கள். ஒருவரை மற்றொருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் சமந்தா சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் 'சாட்' செய்தார். அப்போது அவருக்குப் பிடித்தமான கதாநாயகிகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு வெளிப்படையான பதிலளித்துள்ளார்.
“சிலரது நடிப்பு என்னை சமீபத்தில் வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் பெண்களின் நடிப்பை நேசித்தேன், அவர்கள் எடுத்த ரிஸ்க்கும் நேசிக்க வைத்தது. 'உள்ளொழுக்கு' படத்தில் பார்வதி, 'சூக்ஷ்ம தர்ஷினி' படத்தில் நஸ்ரியா, 'அமரன்' படத்தில் சாய் பல்லவி, 'ஜிக்ரா' படத்தில் ஆலியா பட், 'CTRL' படத்தில் அனன்யா பாண்டே, 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்' படத்தில் கனி, திவ்ய பிரபா, ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்த ஆண்டும் அவர்களது சிறந்த படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.