ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. என்றாலும் அதன்பிறகு தமிழில் அவருக்கு எதிர்பார்த்தபடி பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியாமணி திருமணத்திற்கு பிறகு கிடைக்கிற வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கியிருந்த ஜவான் படத்தில் நடித்திருந்த பிரியாமணி, அதன்பிறகு மலையாளத்தில் ஆபீஸர் ஆன் டூட்டி என்ற படத்தில் நடித்தார். தற்போது தமிழில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஹிந்தி சினிமாவில் தென்னிந்திய சினிமா கலைஞர்கள் மதிக்கப்படுவதில்லை என்ற ஒரு கருத்து வெளியாகி வருகிறதே. இது குறித்த உங்களது அனுபவம் என்ன? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛நானும் அது போன்று சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். என்றாலும் நான் ஹிந்தி படங்களில் நடித்தபோது அப்படி யாரும் என்னை அவமதித்ததில்லை. எல்லோரையும் போல்தான் என்னிடத்திலும் பழகினார்கள். சில பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மரியாதையும் கொடுக்கிறார்கள். என் அனுபவத்தில் அவர்கள் தென்னிந்திய கலைஞர்களை அவமதிப்பது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை'' என்று கூறியிருக்கிறார் பிரியாமணி.




