பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் |
பாலிவுட் நடிகை கங்கனா தனது அதிரடியான துணிச்சலான கருத்துக்களுக்காக பிரபலமானவர். மணிகர்ணிகா என்கிற படம் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த கங்கனா, மறைந்த பாரத பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தற்போது உருவாகியுள்ள எமர்ஜென்சி என்கிற படத்தில் நடித்துள்ளதுடன், அவரே இயக்கியும் உள்ளார்.
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு முறையில் மறைந்த பிரபல தலைவர்களை கூட உயிருடன் இருப்பது போன்றும் அவர்கள் பேசுவது போன்றும் தத்ரூபமாக உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராவின் உருவத்தை செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கி அவருக்கு எதிரில் கங்கனா அமர்ந்து கொண்டு அவருடன் உரையாடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கங்கனா. அதுமட்டுமல்ல செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி உடனும் அவர் உரையாடியது குறித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.