இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கடந்தாண்டு நவம்பர் மாதம் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தார்கள். இந்த செய்தி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அவர்களை சேர்ந்து வாழுமாறு கோரிக்கை வைத்தார்கள்.
இந்நிலையில் தற்போது சாய்ரா பானு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா என்பவர் மூலமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சமீபத்தில் தனக்கு அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு ஆதரவாக இருந்ததை தெரிவித்து அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சாய்ரா பானு. அவர் மட்டுமின்றி, ஆஸ்கர் விருது பெற்ற ஒளி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, அவரது மனைவி ஷாதியா மற்றும் தனது சட்ட ஆலோசகர் வந்தனா ஷா ஆகியோரும், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சாய்ரா பானு.