2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
கடந்தாண்டு நவம்பர் மாதம் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தார்கள். இந்த செய்தி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அவர்களை சேர்ந்து வாழுமாறு கோரிக்கை வைத்தார்கள்.
இந்நிலையில் தற்போது சாய்ரா பானு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா என்பவர் மூலமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சமீபத்தில் தனக்கு அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு ஆதரவாக இருந்ததை தெரிவித்து அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சாய்ரா பானு. அவர் மட்டுமின்றி, ஆஸ்கர் விருது பெற்ற ஒளி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, அவரது மனைவி ஷாதியா மற்றும் தனது சட்ட ஆலோசகர் வந்தனா ஷா ஆகியோரும், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சாய்ரா பானு.