ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, இந்தியன் 2' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கடந்த வருடம் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் டாக்டர் பிரசாந்த் யாதவ் என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் இரண்டு விதமான புகைப்படங்களை வெளியிட்டு அவர் தன்னிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு உருவத் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார் என்கிற தகவலை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் இது குறித்து எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ஒரு சிலர் தங்களை டாக்டர் என்று சொல்லிக்கொண்டு இதுபோன்று செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். நான் இது போன்று எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொள்ளவில்லை. என்னுடைய இந்த உருவத்தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எடை குறைப்பு மற்றும் தொடர் உடற்பயிற்சி ஆகியவற்றால் உண்டானது. அதே சமயம் மற்றவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.