கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து ‛எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி, அவரது வேடத்தில் நடித்துள்ளார் கங்கனா. கடந்தாண்டே வெளியாக வேண்டிய படம். ஆனால் சென்சார் உள்ளிட்ட பல தடைகளை கடந்து இப்படம் ஜன., 17ல் வெளியானது. அதேசமயம் பஞ்சாப் மாநிலத்தில் இப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பால் பல இடங்களில் படம் வெளியாகவில்லை, தடை விதிக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஞ்சாபில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது பற்றி கங்கனா வெளியிட்ட பதிவில், ‛‛இது சினிமா கலைஞர்களை துன்புறுத்தும் செயல். எல்லா மதத்தினர் மீதும் எனக்கு மரியாதை உள்ளது. நான் சண்டிகரில் வளர்ந்ததால் சீக்கிய மதத்தை அருகில் இருந்து கவனித்து, பின்பற்றி வந்துள்ளேன். எனது நற்பெயர் மற்றும் எனது படத்தை களங்கப்படுத்த நடக்கும் பொய் பிரச்சாரம்'' என குறிப்பிட்டுள்ளார்.