இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தனது படங்களில் அற்புதமான நடனத்தினால் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குழந்தை பிறக்கும்போதே இதயத்தில் இரண்டு துவாரங்களுடன் பிறந்தது என்கிற அதிர்ச்சி தகவலை கண்ணீருடன் வெளியிட்டுள்ளார் பிபாஷா பாசு.
இது குறித்து அந்த பேட்டியில் அவர் கூறும்போது, “எங்கள் முதல் குழந்தைக்காக நாங்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்தோம். நான் பெண் குழந்தை தான் பிறக்கும் என என் கணவரிடம் உறுதியாக கூறி வந்தேன். அதேபோல எங்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் தான் பிறக்கும்போதே இருதயத்தில் இரண்டு துவாரங்களுடன் பிறந்துள்ளது என்கிற அதிர்ச்சி கலந்த உண்மை எங்களுக்கு தெரிய வந்தது.
அதன் பிறகு வந்த நாட்கள் மிகப் போராட்டமாக கழிந்தன. இந்த தகவலை நாங்கள் எங்கள் குடும்பத்திற்கு கூட சொல்லாமல் மகளுக்கு மருத்துவம் பார்த்தோம். பிறந்த மூன்றாவது மாதத்தில் அவளுக்கு ஓபன் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவள் எல்லோரையும் போல நலமுடன் இருக்கிறாள். எந்த பெற்றோருக்கும் இதுபோன்ற நிலைமை வரக்கூடாது” என்று கூறியுள்ளார்.