பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயாபச்சன், ஷபனா ஆஸ்மி மற்றும் பலர் நடிப்பில் ஜூலை 28ல் வெளிவந்த ஹிந்திப் படம் 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி'. கரண் ஜோஹர் சினிமாவில் நுழைந்த 25வது வருடத்தில் வெளியாகியுள்ள படம் இது. 2016ல் வெளிவந்த 'ஹே தில் ஹை முஷ்கில்' படத்திற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களாக திரைப்படங்கள் எதையும் கரண் இயக்கவில்லை.
“லஸ்ட் ஸ்டோரிஸ், கோஸ்ட் ஸ்டோரிஸ்” ஆகிய வெப் தொடர்களில் ஒரு பகுதியை மட்டும் இயக்கியிருந்தார். தமிழில் வெளிவந்த 'ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்' படங்களின் சாயலில் வெளிவந்த 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலில் பெரிய சாதனையைப் படைக்கவில்லை. இருப்பினும் கடந்த பத்து நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. தற்போது 105 கோடி வசூலைப் பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரூ.100 கோடி வசூலைக் கடந்த ரன்வீர் சிங்கின் 8வது படமாகவும், ஆலியாவின் 8வது படமாகவும் இப்படம் அமைந்துள்ளது.