இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப் என ஒவ்வொரு மொழியிலிருந்தும் முக்கியமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதனால் அனைத்து மொழிகளிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஜாக்கி ஷெராப் ஏற்கனவே ரஜினியுடன் கோச்சடையான் உத்தர் தக்ஷின் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். இருவருக்கும் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலான நட்பு இருந்து வருகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் ஜாக்கி ஷெராப்.
“படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றியபோது, இத்தனை வருடங்களில் அவர் கொஞ்சமும் மாறவில்லை என்பதை முதல் நாளிலேயே தெரிந்து கொண்டேன். ஜெயிலர் படத்தில் எனது கடைசி நாள் படப்பிடிப்பின்போது எனக்கு முன்னதாக படப்பிடிப்பை முடித்து வீட்டிற்கு கிளம்புவதற்காக காரில் ஏறினார் ரஜினிகாந்த். அதன்பிறகு எனக்கு அன்றுடன் படப்பிடிப்பு முடிவடைகிறது என்பதை தெரிந்து கொண்டதும் உடனே காரில் இருந்து இறங்கி பிரியா விடை கொடுப்பதற்காக என்னை நோக்கி வந்தார்.
அவர் மட்டுமல்ல அவருடன் சேர்ந்து படப்பிடிப்பில் இருந்த சுமார் 500 பேர் அவருடன் சேர்ந்து வந்து எனக்கு பிரியாவிடை கொடுத்தனர். எனக்கு விடை கொடுப்பதற்காகவே திரும்பி வந்த அவரது பெருந்தன்மையை பார்த்து ஸ்தம்பித்து போய்விட்டேன்” என்று நெகிழ்ந்து போய் கூறியுள்ளார் ஜாக்கி ஷெராப்.